தன் மகளுடன், மருமகனுடன்,
தன் பேரப்பிள்ளைகளுடன்,
ஒரு ஆனந்த கதகதப்பில்
கம்பியை இருக்க பிடித்துக்கொண்டு
நீன்றார் ஒரு சீன தாத்தா.
எதிரே ஒதிக்கிவைக்கப்பட்ட இருக்கையில்,
நான் உட்கார்ந்திருந்தேன்.
”அந்த அழகிய நிமிடங்களை உடைக்கவா வேண்டும்?
அந்த சந்தோசக்கூட்டிலிருந்து அவரை பிரிக்கவா வேண்டும்?
எதோ ஒரு தாழ்வு மனப்பான்மையை அவருள் விதைக்கவா வேண்டும்?
என கேள்விகள் சட சடவேன விழுந்தன.
” வேண்டாம், இருக்கையை விட்டுக்கொடுக்க வேண்டாம்.”
மீண்டும் நான் கண்முடினேன்.
தன்நலம் கொண்டவன்.
ஒதுக்கப்பட்ட இருக்கையை விட்டுக்கொடுக்காமல்,
உறங்கற மாதிரி வேசம்போடுகிறான்
என நீன்று பயணித்தவர்கள் நினைத்திருக்கலாம்.
